Monday, July 23, 2007

கோன்ஹே... பாஸ்டா கேன!!


"தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்! உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!!"

சரி அதற்காக ஹிந்தி போன்ற வட மொழிகளை நாம் எதிர்க்கலாமா? தமிழ் மீது அளவிலாப் பற்று வைத்திருந்த பாரதியாருக்கே பல மொழிகள் தெரியுமாம். எனவே தான்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போன்று இனிமையானது எங்கும் காணோம்"

என்றார். சிலர் ஹிந்தியை எதிர்த்தால் தான் தமிழை வளர்க்க முடியும் என்பார் தன் சுய நலத்துக்காக. ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு அவரது குழந்தைகளையோ சேர்ப்பது ஹிந்தி சொல்லித்தரப்படும் சென்டிரல் போர்டு பள்ளியில்!! அது மிகவும் தவறான சிந்தனை.

இப்போது ஆங்கிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது எப்படி வளர்கிறது? வேறு மொழிகளை வளர்ப்பதால் தான் வளர்கிறது.. ஆம் வருடா வருடம் வேறு மொழிச் சொற்களை ஆங்கிலத்தில் இணைப்பார்கள். உதாரணமாக சமஸ்கிருத வார்த்தையான "குரு" (ஆசிரியரைக் குறிப்பது) இப்போது ஆங்கில வார்த்தை.


நாமும் தமிழை வளர்க்க வேண்டுமேயானால் வேறு மொழிகளை கற்க வேண்டும். அப்போது தான் தமிழ் மொழியின் சுவையை முழுமையாக நாம் உணரமுடியும். எப்படி ஹோட்டல் உணவை உட்கொண்டால் வீட்டு உணவின் அருமை புரியுமோ அப்படி!! நாம் அவ்வாறு வேறு மொழிக‌ளைக் க‌ற்க‌வில்லையானால் அத‌ன் விளைவு த‌மிழ‌ர்க‌ளாகிய‌ ந‌ம‌க்கு தான். இப்போது பாருங்க‌ள் த‌மிழ் நாட்டை தாண்டினாலே த‌மிழ‌ர்க‌ள் ஹிந்தி தெரியாம‌ல் பெரும் அவ‌திப்ப‌டுகின்ற‌ன‌ர்.

சீன‌ர்க‌ள் மிக‌வும் கெட்டிக்கார‌ர்க‌ளாக‌ இருப்பினும் ஏன் அவ‌ர்க‌ளால் ந‌ம‌க்கு ஈடாக‌ க‌ணிப்பொறி மென்துறையில் ப‌ணி புரிய‌ முடிய‌வில்லை? கார‌ண‌ம் மொழி. அவ‌ர்க‌ளுக்கு ஆங்கில‌ம் ந‌ம்மைப் போல சரள‌மாக பேச‌ முடியாது. அவ‌ர்க‌ள‌து நிலை ந‌ம‌க்கும் வ‌ர‌க்கூடாது. என‌வே இன்றே வாருங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளே நாம் வேறு மொழிக‌ளையும் க‌ற்போம்!! த‌மிழ் மொழியையும் வ‌ள‌ர்ப்போம்!!

காவல் துறையினர் பற்றி...

எனது முந்தைய பதிவுக்கு பதில் எழுதிய நண்பருக்கு இது பதில் கொடுப்பது போன்று அமையும்.


எனது அன்பு இசுலாமிய நண்பருக்கு, நான் மேலும் மதத்தைப் பற்றி பேசி ஒரு மதக் கலவரத்தை உண்டாக்க விரும்பவில்லை, ஏன்னெனில் எமக்கு எம்மதமும் சம்மதமே! சொன்னால் நம்ப மாட்டீர் எனக்கு இசுலாமிய மதத்தில் தான் நிறைய நண்பர்கள் உள்ளனர். மதத்தைப் பற்றி பேசி நான் அவர்கள் மனதைப் புண் படுத்த விரும்பவில்லை. நான் மதத்தைவிட மனிதர்களின் மனதை மதிப்பவன். இதற்கு முன்னர் எழுதிய மடலால் எவர் மனமாவது புண் பட்டிருந்தால் என்னை தயவு செய்து மன்னிக்கவும். சற்று சாதி சமயத்தை மறந்து வேறு திசையில் சிந்தித்துப் பார்ப்போம்.


நீங்கள் எப்படி காவல் துறையினர் கிடா வெட்டுவதோடு நிறுத்திவிட்டனர், குற்றாவாளிகளைக் கண்டுபிடிக்க மேற்கொண்டு முயற்சிகள் செய்ய வில்லை என்கிறீர்கள்? நீங்கள் எந்த ஒருச் செயலைச் செய்யும் முன்னே "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்" என்று சொல்லிவிட்டுதானே துவங்குகிறீர் அதைப் போல், அவர்கள் (காவல் துறையினர்) கிடா வெட்டி விட்டு அவர்கள் குல தெய்வத்திற்குப் படைத்துவிட்டு பின்னர் குற்றாவாளியை தேட ஆரம்பிக்கலாம் அல்லவா? தயவு செய்து காவல் துறையினரை பலிக்காதீர் நண்பரே. நாம் இந்தியாவில் இத்தனை சுதந்திரமாக இருக்கிறோமேயானால் அதற்கு அவர்கள் உழைப்பு தான் காரணம். நாம் நிம்மதியாக கண் தூங்குவதற்கு அவர்கள் இரவு பகல் பாராது கண் விழித்துத் தன் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.


அவர்களுக்கு இந்த சமுதாயமும் அரசாங்கமும் என்ன செய்கிறது? இராணுவத்தில் இருப்பவற்கு இலவச ரேசன், கண்டீன் வசதி, ஓய்வு பெற்றோருக்கு வேலை வாய்ப்பு போன்று பல சலுகைகள் உள்ளன. பாவம் காவல் துறையினருக்கு என்ன உள்ளது?


இராணுவத்தினருக்கு போர்க்காலத்தில் தான் வேலை, ஆனால் காவல் துறையினருக்கோ வருடம் 365 நாட்கள், வாரம் 7 நாட்கள், ஒரு நாளுக்கோ 24 மணி நேரம் வேலை!! ஆனால் இறுதியில் நாம் என்ன சொல்கிறோம் காவல் துறை தூங்குகிறது, இலஞ்சம் வாங்குகிறது, குற்றவாளிகளைப் பிடிக்காமல் கிடா வெட்டுகிறது என்று!!


ஓரிரு காவல் துறை அதிகாரி இலஞ்சம் வாங்குவதால் நாம் ஒட்டு மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்லலாகாது. அப்படிப் பார்த்தால் நாட்டைக் காக்க வேண்டிய இராணுவத்தினரும், இத்த‌னைச் சலுகைக‌ள் இருந்தும் ப‌ணம் வாங்கிக் கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுக்க‌வில்லையா? ஒரு உயிரைக்காக்க வேண்டிய மருத்துவரும், நீதிபதியும் காசு கொடுக்காததால் அவர்கள் கடமையைச் சரிவரச் செய்யத் தவறவில்லையா? அவர்க‌ளுக்கு காவ‌ல் துறையின‌ர் எவ்வ‌ள‌வோ மேல்.


Thursday, July 19, 2007

எல்லா மதத்திலும் மூட நம்பிக்கைகள் உள்ளன!!

எனது அருமை இஸ்லாமிய நண்பர் முன்பு எழுதிய வலைப்பூவை தயவு செய்து பார்க்கவும். அதன் தொடர்ச்சியாக இது அமையும்.

இப்படிப்பட்ட மூட நம்பிக்கை எந்த மதத்தில் தான் இல்லை. இஸ்லாமிய மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் இதோ

1, ஹஜ் யாத்திரை சென்றால் நாம் செய்த பாவங்கள் தீரும். சரி அப்படியென்றால் நாம் கொலை கற்பழிப்பு எல்லாம் செய்து விட்டு ஹஜ் யாத்திரை செல்வோம். நம் பாவம் தீர்ந்து விடும் தானே.
2, கிடா வெட்டுவது உங்கள் மதத்திலும் தானே உள்ளது. ஹஜ் யாத்திரையின் போது நீங்களும் குர்பானி தருவீர்கள் தானே!!
3, ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் அதை எதிர்க்க‌ கல் எறிவார்கள். சரி சாத்தான் வந்தால் அதைக் காட்டுங்கள். அதை ஏன் நீங்கள் எதிர்கிறீர்கள் அல்லாஹ் பார்த்துக் கொள்ளமாட்டாரா?
4, உம்ரா செய்தால் புண்ணியம் கிட்டும். சரி கொலைகாரர்களை சிறையில் அடைப்பதற்கு பதில் உம்ரா செல்லச் சொல்வோம்.
5, இந்தியாவில் உள்ள தர்கா சென்று வழிபடுவது. அந்த சமாதியில் இருப்பவன் எப்போதோ இறந்து விட்டான் அவன் எப்படி உங்களுக்கு அல்லாஹ்விடம் துவா கேட்பான்!!

இவைப் போன்ற பல மூட நம்பிக்கைகள் உள்ளன.

இப்படி பல மூட நம்பிக்கைகள் உள்ள நீங்கள் (இஸ்லாமியர்கள்) இந்து மதத்தின் மூட நம்பிக்கைப் பற்றி சொல்ல எந்த தகுதியும் கிடையாது!!

Wednesday, July 11, 2007

இலங்கையின் பொருளாதாரம்.

இலங்கை ஒரு இயற்கை வளம் மிகுந்த நாடு. அங்கு விளையும் பயிர்களில் தேயிலை மற்றும் காபிக் கொட்டை மிகவும் முக்கியமானது. அங்கு தேங்காய் மற்றும் இரப்பர் மரங்களும் பயிரிடப்படுகிறது. நல்ல கணிமங்களும் மிகுந்தது. சரி நாம் விஷயத்திற்கு வருவோம். இத்தனை வளம் இருந்தும் ஏன் அங்கு வளர்ச்சி இல்லை? மக்கள் ஏன் வெளி நாட்டிற்கு சென்று கஷ்டப்படுகிறார்கள்? உலகில் அதிகமான வீட்டு வேலை செய்யும் பெண்கள் விசா (ஹவுஸ் மேய்டு) இலங்கைக்குத்தான் வழங்கப்படுகிறது. அங்கு உள்ள பெண்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேருகிறார்கள். வளைகுடா நாடுகளில் ஹவுஸ் மேய்டு விசாவில் வரும் அவர்கள் படும் பாடு சொல்லித்தீராது.

இவை அனைத்திற்கும் காரணம் அங்கு நடந்து வரும் விடுதலைப் புலியினருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நடக்கும் யுத்தம். அது எப்போது முடியும்? ஏன் இந்தியா இதில் தலையிட மறுக்கிறது? ஒரு காலத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது வங்கதேசம் பாக்கிஸ்தான் இடையே நடந்த யுத்தத்தில் ‌தலையிட்டு அங்கு அமைதி நிலை உருவாக்கிக் கொடுத்தார். அதே போல் ஏன் இலங்கை யுத்தத்திலும் தலையிட்டு அங்கும் அமைதி நிலை உருவாக்கிக் கொடுக்கக் கூடாது?

இந்திய பிரதமர் நார்வே பிரதமரிடம் இலங்கையில் அமைதிப் பேச்சு‍ நடத்தக் கோரிக்கை விடுத்தாராம்! ஏன் இந்தியாவால் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த இயலாதா? இந்தியாவின் மக்கட்தொகையிலும் சரி வளர்ச்சியிலும் சரி தமிழர்கள் ஒரு முக்கியப் பங்கு வகித்து வருகிறார்கள். அதே தமிழர்கள் தான் அங்கும் உள்ளனர். அத்தமிழர்களையாவது மனதில் கொண்டு இந்திய அரசு அப்பிரச்சனையில் தலையிட்டு ஒரு நல்ல சுமூகமான தீர்வு காணலாமே.

அப்பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும். இலங்கையில் வெகு விரைவில் அமைதி நிலைத் திரும்ப வேண்டும். இப்படிச் சொல்வதால் நான் எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்தவன் என்று எண்ண வேண்டாம். நான் உலகத் தமிழர்களின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட ஒரு சாதாரண தமிழன் அவ்வளவுதான்..

Sunday, July 8, 2007

சர்தார்ஜி ஜோக்ஸ்!

இவை அனைத்தும் நான் ஒரு இணையதளத்தில் படித்தவை.

சான்டா சிங்கு ஒரு நர்ஸை காதலிக்கிறார். ஒரு லவ் லேட்டர் எழுதுகிறார். அதில் "ஐ லவ் யூ சிஸ்டர்" என்று எழுதுகிறார்.

*******************************************‍‍‍‍‍‍‍


பப்பு (சான்டாவின் மகன்): ஒரு பாரம் நிரப்புகிறார் "மதர் டங்கு என்ற இடத்தில் என்ன எழுத".சான்டா: 6 1/2 முழ‌ம் என்று எழுது.

*******************************************

சர்தார் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவளிடம் தனது காதலை வெளிபடுத்துகிறார். அதற்கு அவள் நான் உன்னை விட ஒரு வருடம் மூத்தவள் என்கிறாள். நோ பிராபலம் சோனியே நான் உன்னை அடுத்த வருடம் திருமணம் முடிக்கிறேன்.

‍‍‍‍‍‍‍‍‍‍*******************************************


பான்டா சிங்கு தனது தேர்வு எழுதும் போது தனது டிரௌஸரை கழட்டுவிட்டு எழுதுகிறார் ஏன்?அவை அனைத்தும் "Answer in Brief" வினாக்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍*******************************************


சான்டா சிங்கு ஒரு தொடர் வண்டி ஓட்டுனராக பணியாற்றுகிறார். அப்பொழுது ஒரு விபத்து நடந்து ஒரு ஊரையே காலி செய்துவிட்டார். அவரிடம் பேட்டி. நிருபர்: எப்படி இந்த விபத்து நடந்தது? சான்டா: எதிற்கே ஒரு மாடு வந்தது.நிருபர்: அடப்பாவி மாடு வந்தால் அது மேல் வண்டியை ஏற்ற வேண்டியது தானே.சான்டா: ஆம் நான் அதைத்தான் செய்தேன். வண்டியை கண்டவுடன் மாடு ஊரை நேக்கி ஓடியது.

‍********************************************

ஏன் சான்டா கதவு பக்கத்தில் உட்கார்ந்து தேர்வு எழுதினார். ஏனெனில் அது நுழைவுத்தேர்வு.

********************************************

சான்டா: மன்மோகன் சிங்கு ஏன் காலையில் நடை பயிற்சி செய்யாமல் இரவு செய்கிறார்?பான்டா: ஏன் என்றால் அவர் பி.எம். ஏ.எம். இல்லை.

********************************************

ஏன் மிஸிஸ் சான்டா பெயின்ட் அடிக்கும் போது இரண்டு கோட்டுகளை போட்டுக் கொண்டார். ஏனெனில் அதில் "For best results put on two coats" என்று எழுதியிருந்தது.

‍********************************************

சான்டா: நான் தினமும் அலுவலகம் செல்லும் முன் என் மனைவியை முத்தமிடுவேன். நீ?பான்டா: நீ சென்றவுடன் நான் முத்தமிடுவேன்.

********************************************

சான்டா சிங்கு டில்லியிலிருந்து சண்டிகார் காரில் 6 மணி நேரத்தில் செல்லுகிறார். திரும்ப சண்டிகாரில் இருந்து டில்லி வருவதற்கு 2 நாட்களாகிறது. ஏன் என்று மனைவி கேட்கிறாள். அதற்கு சான்டா "முன்னால் போக 4 கியர்கள் உள்ளன. ஆனால் பின்னால் போக மடையன் ஒரு கியர்தான் வைத்துள்ளான்" என்றார்.

Saturday, July 7, 2007

தொடர் வண்டிகளில் பெண்கள்.


சென்னையிலும் மற்றும் சென்னை புற நகரிலும் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் தொடர் வண்டிகளில் இன்றும் பெண்களுக்காக 2 அல்லது 3 பெட்டிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பொது பெட்டிகளில் பெண்கள் ஏறினால் அவர்களின் நிலை என்னவாகும் என நான் சொல்லித் தெரிவதில்லை, ஆண்களின் சீண்டல்களுக்கும் உரசல்களுக்கும் ஆளாவார்கள் என்பது அனைவரும் தெரியும். இருந்தும் ஏன் அவர்களுக்கு மேலும் பெட்டிகளை கொடுக்காமல் இரயில்வே அவர்களை இவ்வாறு துன்புறுத்துகிறது?

நன்றி: தினமலர் ஈ - பேப்பர்.

Wednesday, July 4, 2007

பெரியாரின் கூற்று.

"தமிழன்"

பெரியார் சரியாகத்தான் கூறியுள்ளார். இன்றும் பெண்களின் நிலை அவ்வாறே தான் உள்ளது. பெண்களை நாம் ஒரு கேளிக்கை பொருளாகவோ அல்லது ஒரு பிள்ளை பெறும் இயந்திரமாகவோ தான் எண்ணுகிறோம். ஒரு உயிருள்ள, உணர்வுகளுள்ள பொருளாக நினைக்க மறுக்கிறோம். இன்னமும் பேருந்துகளில் ஆண் நாய்களின் உரசல்களும் தீண்டல்களும் நீடித்து தான் வருகிறது. இது மிகவும் வேதனைக்குரியது. வெட்கத்துக்குரியது.

இந்த கணிப்பொறியுகத்திலும் பெண்ணுக்கு சம உரிமைக் கொடுக்க நாம் மறுக்கிறோம். சென்னையில் பெண்கள் சிறப்பு எலக்டிரிக் டிரேயின் விட்டபோது பொதுமக்களிடையே எத்தனை எதிர்ப்புகள் வந்தது தெரியுமா? என் நண்பன் கூட அதை எதிர்த்துப் பேசியது எனக்கு மிகவும் வருத்தமளித்தது. பெண்களின் இந்த நிலை என்று மாறுமோ அன்று தான் இந்தியா வல்லரசு நாடாகும் என்பது உறுதி.

Monday, July 2, 2007

சிவாஜி - என் கண்ணோட்டம்

சிவாஜி பற்றி நிறைய விமர்சனங்களை நாம் படித்துவிட்டோம். சிலர் குறை கூறினர், வேறு சிலர் அவற்றுள் உள்ள நிறையை கூறினர். நான் நேற்றுதான் சிவாஜி, திருட்டு விசிடி மூலம் பார்த்தேன் (தயவு செய்து மன்னிக்கவும், நான் சௌதி அரேபியாவில் உள்ளேன் இங்கு திரை அரங்கு கிடையாது, எனவே திருட்டு விசிடி தான் ஒரே வழி). நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் இருந்தும் ஏனோ நான் எதிர்ப் பார்த்த அளவுக்கு படம் இல்லை. சந்திரமுகி படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அந்த படத்தை குறைந்தது 20 முறையாவது பார்த்து இருப்பேன். எனக்கு அன்னியன் படம் கூட பிடித்திருந்தது. ஆனால் சிவாஜி நான் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை.

என்ன காரணம் என்று நான் யோசனை செய்தேன். காரணம் புரிந்து விட்டது. சங்கர் படம் என்றாலே ஒரு எதிர்ப் பார்ப்பு இருக்கும். அதுவும் சங்கரும் சூப்பர் ஸ்டாரும் சேர்ந்து செய்ததால் நாம் அதிகம் எதிர்ப்பார்த்து விட்டோம். படம் நம் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்ய தவறிவிட்டது. ஆனால் உலக அளவில் தமிழ் படத்திற்கு பெருமை சேர்த்துவிட்டது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் மூலம் மெல்போர்ன் நகர் திரை அரங்கில் மிகவும் அதிக டிக்கட் விலை போன‌ படம் சிவாஜி என்று தெரிந்து கொண்டேன். எத்தனையோ ஆங்கிலப் படங்கள் அங்கு திரையிடப்பட்டுள்ளனவாம் இருந்தும் சிவாஜி டிக்கட் விலை அவற்றை விட அதிகம் போனது என்பது பெருமைக்குரியது. மேலும் பல சாதனைகளை முறி அடித்துவிட்டது சிவாஜி என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி ஒரு சிற‌ந்த‌ க‌ம‌ர்சிய‌ல் ப‌ட‌ம்...