Thursday, July 17, 2008

இசுலாமியர்கள் என்ன திருடர்களா???

சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குருவி பார்த்தீர்களா? அதில் நம்ம தலைவரு விஜய் எப்படி மலேசியா போவார்? பாய்னு ஒருத்தர் மூலம் கடத்தல் பொருட்களை எடுத்துக் கொண்டு குருவியாக போவார்! சரி அது இருக்கட்டும்.

சிவாஜி படம் பார்த்தீர்களா? அதில் இந்தியாவிலிருந்து நம்ம சூப்பர் ஸ்டார் கருப்புப் பணத்தை எல்லாம் எப்படி வெள்ளையாக்குவார்? ஒரு பாயிடம் கொடுத்து ஹவாலா செய்து! ஏன்யா இசுலாமியர் மட்டும் தான் உலகிலுள்ள எல்லா குற்றமும் செய்வார்களா? மற்றவர்கள் ஒரு குற்றமும் செய்யா உத்தமர்களா? ஏற்கனவே இந்தியாவில் இசுலாமியருக்கும் இந்துக்களும் பயங்கரமான பிரச்சனை போய் கொண்டிருக்கிறது நீங்க வேற ஏங்க? சினிமாகாரங்க நல்லது ஒன்னும் செய்யமுடியவில்லைனா சும்மாவாது இருக்கலாம்ல அத விட்டுட்டு ஏன் இப்படி எரிகிற நெருப்புல எண்ணையை ஊற்றுகிறீர்?

உண்மையை சொல்ல வேண்டுமேயானால் இசுலாமில் மது அருந்துவதும் விலைமாதரிடம் செல்வதும் வட்டி வாங்குவதுவும் கூட பாவம். அப்படிப் பட்டவரா கடத்தல் ஹவாலா போன்றவற்றில் ஈடுபடுவார்?? இனிமேலாவது சினிமா எடுக்கும்போது பார்த்து எடும்!! இப்படி எடுத்துவிட்டு தயவுசெய்து இந்துக்களுக்கும் இசுலாமியருக்கும் பிரச்சனைமூட்டாதீர்!!