Monday, June 18, 2007

மக்களை முன்னேற்றுவதே மதம் என்பது...

சமயம், மதம் என்பது என்ன? முந்தைய கால மனிதன் ஒரு நெறி இல்லாமல் நெறி கெட்டு தறி கெட்டு சென்று கொண்டிருந்தான். அவனை ஒரு நெறிக்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே மதம் என்னும் ஒரு நெறி நம் முன்னோர்களால் கொண்டுவரப்பட்டது. மதம் ஒருப் போதும் மக்கள் முன்னேற்றத்தை தடுப்பதாகாது.

பிற்காலத்தில் மன்னர்களும் அரசியல்வாதிகளும் ஏற்படுத்தியதுதான் சாதியாகும். ஒரு மதத்தை உண்மையாக பின்பற்றுபவன் ஒருக்காலும் தீய செயலை செய்ய மாட்டான். நான் இங்கு எந்த மதத்தையும் குறிப்பிட்டு கூறவில்லை. உண்மை என்னவெனில் அனைத்து மதமும் ஒன்றே. அனைத்து மதமும் ஓரே கருத்தைத் தான் சொல்லும். வெவ்வேறு மதங்கள் பிற்காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது. ஒருவரிடம் சென்று "டேய் அதைச் செய்யாதே" என்றால் அதைத்தான் செய்வான். அதே ஆளிடம் சென்று "டேய் அதைச் செய்தால் நரகத்திற்கு சென்று விடுவாய்" என்றால் பயந்து கொண்டு செய்ய மாட்டான்.

நான் பெரியார் கூறியது தவறு என்று சொல்லவில்லை. அவர் சாதியின் வேரை அறுக்கவே மதம் வேண்டாம் என்றார். வெறும் சாதி இல்லை என்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே தான் அவர் சாதியின் வேரான மதமே இல்லை என்றார்.

மற்றபடி பெண்ணடிமைத்தனம், தீண்டாமை போன்றவை காலப்போக்கில் மதத்திற்குள் திணிக்கப்பட்டது. எந்த ஒரு மதமும் அவற்றை ஒருப்போதும் ஆமோதிக்காது.

No comments: