Sunday, June 17, 2007

சினிமா சொல்லும் கலாச்சாரம் !!

சமீபத்தில் வெளி வந்த படங்களில் எது நல்ல படம் என்று என் நண்பனிடம் கேட்டேன். அதற்கு அவன் "மச்சி உன்னாலே உன்னாலே செம படம் மச்சி, நல்ல கதை நல்ல பாடல்கள் நல்ல நடிப்பு" என்று சொன்னான். அவன் சொன்னது என் மனதில் முள் போல குத்தியது.

அதில் ஒரு காட்சி வரும். இராசு சுந்தரம், வினை (கதாநாயகன்) மற்றும் சதா காரில் செல்வார்கள். அப்போது இராசு சுந்தரத்திற்கு தன் கைத்தொலைபேசியில் ஒரு கால் வரும். அதாவது ஒருவன் ஒரு பெண்ணை அவர்களுக்கு அனுப்பியதாகவும், அப்பெண்ணுடன் நம் கதாநாயகன் வினை "Full Night Full Tight" என்று இராசு சுந்தரம் சொல்வார். உடனே சதா கோபித்துக் கொண்டு காரைவிட்டு கீழே இறங்கி விடுவாள். நம் கதாநாயகன் சொல்வார் புரிந்து கொள் என்று. ஏதோ அவர் ஒன்றும் செய்யவில்லை, சதா தான் தவறாக நினைத்துக் கொண்டாள் என்றும் அதை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும். இப்படி ஈனச் செயலை செய்யும் இவன் கதைக்கு நாயகனாம்?

முன்பு வந்த படங்களில் கதையின் நாயகன் ஒரு உத்தமராய் இருப்பார். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிப்பார். ஆனால் இப்போது உள்ள காதாநாயகன் திருமணத்திற்கு முன்பு தகாத உறவுகளை வைத்துக் கொள்கிறார். இதை கதாநாயகி புரிந்து கொள்ள வேண்டுமாம், இது தவறில்லையாம். இதை பார்க்கும் இளைய சமூகத்தினர் என்ன செய்வார்கள் சிந்தியுங்கள்...

இப்படிப்பட்ட திரைப்படத்தை எப்படி நமது சென்சார் வெளியிடுகிறார்கள் என்று புரியவில்லை. இப்படிப்பட்ட படம் நல்ல படம் என்ற பெயரையும் பெற்றுவிடுகிறது. இதனால்தான் நம் நாட்டில் Dating மிகுந்துள்ளது. நம் கலாச்சாரம் அழிந்து கொண்டு வருகிறது.

No comments: